ஜப்பானிலுள்ள ஒரு தீவில் மர்மப் படகு ஒன்று கரையொதுங்கியது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
சாடோ தீவு அருகே மர்மப் படகு ஒன்று பாதி உடைந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனைப்பார்த்த அப்பகுதி மீனவர்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற அதிகாரிகள் படகை சோதனை செய்தனர். அப்போது அந்த மர்மப் படகில் 7 சடலங்கள் சிதைந்த நிலையில் இருந்துள்ளன. சடலங்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பிய காவல்துறை அதிகாரிகள், படகு எங்கிருந்து வந்தது
அதிலிருந்தவர்கள் உயிரிழக்க காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜப்பானிலுள்ள ஒரு தீவில் மர்மப் படகு ஒன்று கரையொதுங்கியது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
சாடோ தீவு அருகே மர்மப் படகு ஒன்று பாதி உடைந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனைப்பார்த்த அப்பகுதி மீனவர்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற அதிகாரிகள் படகை சோதனை செய்தனர். அப்போது அந்த மர்மப் படகில் 7 சடலங்கள் சிதைந்த நிலையில் இருந்துள்ளன.
சடலங்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பிய காவல்துறை அதிகாரிகள், படகு எங்கிருந்து வந்தது அதிலிருந்தவர்கள் உயிரிழக்க காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments:
Write comments